சிறையில் "சுயசரிதை" எழுதும் சசிகலா

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சுயசரிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். அத்துடன் சிறைக்கு உள்ளேயும் தியானத்தை தொடர்ந்து மேற்கொள்கிறாராம் சசிகலா.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அரசியலில் குதித்தார். ஜெயலலிதாவைப் போல நடை உடை சிகை அலங்காரம் செய்து கொண்டார். ஆனால் இதை தமிழக மக்கள் எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சசிகலா அதிமுக பொதுச்செயலராகி முதல்வர் நாற்காலியில் அமரவும் முயற்சித்தார். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிறை தண்டனையை உறுதி செய்ததால் முதல்வர் பதவி கனவு தவிடுபொடியானது.
சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு சசிகலா போன நாளில் அவர் அரங்கேற்றிய நாடகங்கள் ஏராளம்.. ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் மூன்று முறை ஓங்கி அடித்து கர்ண கொடூரமாக சபதமெல்லாம் எடுத்தார்.
அப்படியே திடீரென எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் இல்லத்துக்குப் போய் தியானத்தில் ஈடுபட்டார். பெங்களூரு சிறைவாசலில் கணவர் நடராஜனை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
சிறைக்குள் போன சசிகலா தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறாராம். அப்படியே ஒரு வாக்கிங் போய் அங்கேயும் தியானத்தை தொடர்கிறாராம்.
அதன் பின்னர் ஜெயில் மேட் இளவரசியுடன் அமர்ந்து பழைய சம்பவங்கள், நிகழ்வுகளை பேப்பரில் எழுதுகிறாராம். இவை எல்லாவற்றையும் தொகுத்து சுயசரிதை ஒன்றை வெளியிடும் முடிவில் இருக்கிறாராம் சசிகலா.
நாட்டை உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பீட்டர் முகர்ஜி சிறையில் தம்முடைய சுயசரிதை எழுத லேப்டாப் வேண்டும் என கேட்டிருந்தார். அதேபோல் தாமும் கேட்கலாமா என்கிற யோசனையில் இருக்கிறாராம் சசிகலா.
Tags : OPannerselvam,Jayalalitha,Karunanidhi,MKstalin,SasikalaNatarajan,NarendraModi,TamilisaiSoundarajan,Deepa,Vijayakanth,Vaiko,Thirumavalavan,DMK,AIADMK,BJP,DMDK
LATEST NEWS
கட்சியின் பெயர், சின்னம், கொடி பற்றி கமல்ஹாசன் ஆலோசனை
தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசு தேசிய விருது வேண்டாம் - விஜய் சேதுபதி அதிரடி
ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்- லதா ரஜினிகாந்த்
செக்ஸ் வேண்டும் வெயிட்டரிடம் கேட்ட பிரபல நடிகை அதிர்ச்சியில் திரையுலகம்!
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே மோதல்!
நடிகை ஜெயசுதாவின் கணவரின் மரணம் : தற்கொலையா?
நான் பொதுச் சொத்து கிடையாது: வித்யா பாலன் ஆவேசம்
இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்த ரஜினி
கமல் 34 தடவை தான் - கமல் பற்றி அஜித்
பரத நாட்டியம் பரிதாப நாட்டியமாகிவிட்டது! - பிரபல பாரத நாட்டிய கலைஞர்
Leave a comment.